பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மாணவனின் தந்தை அருளானந்தம் உள்ளிட்ட 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் 20ம் தேதி உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் (39), விசில் அடித்ததை கேலி செய்த மாணவன் அர்னால்டை கன்னத்தில் அடித்துள்ளார்.
இதுபற்றி அறிந்த மாணவனின் தந்தை அருளானந்தம், தனது ஆட்களுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பாஸ்கரை தாக்கினார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய கோடம்பாக்கம் போலீசார் 35 பேரை கைது செய்து அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை முயற்சி செய் தல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அருளானந்தமும் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி அறிந்த மாணவனின் தந்தை அருளானந்தம், தனது ஆட்களுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பாஸ்கரை தாக்கினார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய கோடம்பாக்கம் போலீசார் 35 பேரை கைது செய்து அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை முயற்சி செய் தல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அருளானந்தமும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி அருளானந்தம், குமார், மகேஷ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. அரசு வக்கீல் சண்முகவேலாயுதம், மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆகியோர் ஆஜராகி, படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை தங்களின் செல்வாக்கால் கலைத்துவிடுவார்கள். எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என்றனர். இதையடுத்து, 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை