மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை எக்காரணங்கள் கொண்டும், பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
மாணவர்களின் விவரங்களை, www.tnge.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ளவேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட, பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தில், யூசர் ஐ.டி., பாஸ்வோர்டு பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனில் விவரம் பதிவேற்றம் செய்யும் பணிகளை, பிரவுசிங் சென்டர்களில் எக்காரணங்களை கொண்டும் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், மாணவர்களின் பட்டியல் ஆப்-லைனில் பதிவேற்றும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், ஆன்-லைன் பணிகளை மேற்கொள்ள தயார்நிலையில் இருக்குமாறும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை