பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கு அரசுத் தேர்வுத்துறையால் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களை நேரடியாக அணுகி, ஆன்-லைன் முறையில், விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கோவை கல்வி மாவட்டத்தில், அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள்), அரசு துணிவணிக மேல்நிலைப்பள்ளி (மாணவிகள்), சூலுார் அரசு மேல்நிலைப் பள்ளி (இருபாலர்), நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்) என, நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள்), நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (மாணவிகள்) ஆகிய மூன்று சிறப்பு சேவை மையங்கள், என, கோவை வருவாய் மாவட்டத்தில், மொத்தம் ஏழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக் கட்டணம், 125 ரூபாய்; கூடுதலாக ஆன்-லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் என, 175 ரூபாயை பணமாக மட்டுமே, செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்தபின், தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை