கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆனால், தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தேர்வெழுதியவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தேர்வெழுதியவர்கள் கூறியதாவது: தேர்வாணையம் வெளியிட்ட மாதிரி விடைகளை வைத்து பார்க்கும்போது எங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கட்டாயம் தேர்ச்சி பெற்று வேலை வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் வேறு பணிக்கு செல்லாமல் தேர்வு முடிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அடுத்தபடியாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் குரூப்-4 தேர்வை எழுத வேண்டி இருக்காது. குறைந்தபட்சம் குரூப்-4 தேர்வுக்கு முன்பாவது கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியானால் பயிற்சி மையத்திலாவது சேர்ந்து குரூப்-4 தேர்வுக்கு தயார் ஆகலாம் என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை