அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாட நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பாடப்பிரிவுகளில் சுமார் 16 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகிறது. அதில் பெரும்பாலான புத்தகங்கள் அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மே மாத கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முதல் நாளே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சில்லறை விற்பனை கடைகளில் விலை கொடு த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஏற்ப அந்தந்த பள்ளி நிர்வாகங்களே பணம் செலுத்தி தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து வாங்கிக் கொடுக்கின்றனர். இந்நிலையில், 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வு எழுதி முடித்ததும் இரண் டாம் பருவத்துக்கு தயாராக வேண்டும்.
அதாவது டிசம்பர் மாதம் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கும். அதே நேரத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடங்களை தனியார் பள்ளி ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அதனால், 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் டிசம்பர் மாதங்களில் பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தங்களை வாங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதே போல அரசுப் பள்ளிகளிலும் நடத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் 9ம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்க கடை கடையாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிடும் புத்தகங்களில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சில்லறை விற்பனைக்கு ஒதுக்கி தனியார் புத்தக கடைகளுக்கு கொடுக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு பாடநூல் கழகமே கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்தில் சில்லறை விற்பனையும் செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக கிராக்கி ஏற்படுவது வழக்கம். இது தெரிந்திருந்தும் சில்லறை விற்பனையில் குறைவான புத்தகங்களை விற்பனை செய்வதை தமிழ் நாடு பாடநூல் கழகம் வழக்கமாக வைத்துள்ளது. இ ந்த ஆண்டுக்கான புத்தகங்கள் அச்சிட்டதில் கடந்த ஒரு மாதமாகவே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் தமிழ் நாடு பாடநூல் கழகத்தில் ஸ்டாக் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். அதேபோல சென்னையில் உ ள்ள எந்த சில்லறை விற்பனை கடைகளிலும் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி பத்தாம் வகுப்பு புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் தெரிவித்தும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மவுனம் சாதித்து வருகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை