முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பத்தை முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் வாங்கிச் சென்றனர்.
மாநிலம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்காக 2 கவுன்ட்டர்களும், பூர்த்தியான விண்ணப்பத்தை வாங்குவதற்காக 1 கவுன்ட்டரும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர். சென்னையில் மட்டும் முதல் நாளில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் 32 மையங்களில் விண்ணப்ப விற்பனை நடைபெற்றது. இந்த மையங்களில் ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
இந்த விண்ணப்ப விற்பனை நவம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் அன்றே கடைசி நாள் ஆகும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை