மாணவர்கள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தினமும் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து நூலக ஆய்வாளர் சி.எஸ்.ராஜ்குமார் பேசியது: மாணவர்கள் பாடநூல்களுடன் அறிவுத் திறனை வளர்க்கும் சிறுகதைகள், பொது அறிவு சார்ந்த நூல்கள், தலைவர்களின் வரலாறு ஆகிய நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். அன்றாடம் நடைபெறும் முக்கியச் செய்திகளைச் தெரிந்து கொள்ள செய்தித் தாள்கள் படிப்பதை மாணவர்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
சாலையில் தினமும் பயணிக்கும்போது போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்றார் அவர்.
இந்த முகாம் வெள்ளிக்கிழமை (நவ.28) வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் எருக்கஞ்சேரி கிளை நூலகர் சி.ஆ.மோகனரங்கம், செம்பியம் காவல் நிலைய எஸ்.ஐ.க்கள் என்.ரங்கநாதன், ஆர்.உமாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை