பணவிடை பட்டுவாடா செய்யும்போது தபால் ஊழியர்கள் ‘அன்பளிப்பு’ கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.
சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சலக சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவி தொகை பணவிடை வழங்கப்படும்போது, ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ தயவு செய்து தபால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒத்துழைப்பு
தபால் ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது, பணம் கேட்பதோ அல்லது பணம் பிடித்தம் செய்து வழங்கப்படுவதோ இருப்பின், பயனாளிகள் தங்கள் புகார்களை, ‘‘அஞ்சல் துறை தலைவர், சென்னை நகர மண்டலம், தொலைபேசி எண்– 044–28592877 அல்லது இணை இயக்குனர், மத்திய புலனாய்வு துறை என்ற முகவரியிலோ, தொலைபேசி எண் 044–28270992 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இத்தகைய புகார்கள் எங்களுக்கு கிடைக்கப் பெற்று, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பல தபால் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பலர் பணியில் இருந்து கூட நீக்கப்பட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளிகள் அஞ்சல் துறையின் வேண்டுகோளை ஏற்று அஞ்சலக சேவைகள் மேம்பட தங்கள் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.f
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை