தேசிய அறிவியல் தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
"தேசிய அறிவியல் தினம்' பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான அறிவியல் தினம் "நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தினத்தை நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும்.
அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கான அறிவியல் கண்காட்சி, அறிவியல் சொற்பொழிவுகள், அறிவியல் தலைப்புகளில் ஒலி, ஒளிக் காட்சிகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நூல்கள் வெளியிடுதல், நாளிதழ்களில் அறிவியல் சிறப்புக் கட்டுரைகளை வெளியிடுதல், தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், அறிவியல் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தல், கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு இடையே போட்டிகளை நடத்துதல், விஞ்ஞானிகள், பிற ஊழியர்களின் குடும்பத்தினருக்கான போட்டிகளை நடத்துவது என்பன உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டும்.
இது தொடர்பாக இணைப்புக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை