சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர்கள் அருண், ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். சுமார் 400 பள்ளிகளின் சார்பில் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் தரப்பில் கண்டிப்பான உத்தரவுகள், பிறப்பிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–
ஜி.பி.எஸ். கருவிகள்
* பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியே வாசலிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கேமராக்கள், தெளிவாக படம் பிடிப்பனவாக இருக்க வேண்டும்.
* மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்கள் மற்றும் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை புகைப்படத்துடன் சேகரித்து வைத்திருக்கவேண்டும். தனியாக வேன்களில் மாணவ–மாணவிகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், மேற்படி வேன்களின் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
* பள்ளி வேன்–பஸ்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருக்க வேண்டும்.
* மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு, அந்தந்த பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. பெற்றோரும், தங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பி வரும் வரை, உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மேற்கண்டவாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
வேகத்தடுப்புகள்
பள்ளிகள் செயல்படும் சாலைகளில், உரிய வேகத்தடைகளை அமைப்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் மீண்டும், இதுபோன்ற ஆலோசனை கூட்டத்தை நடத்திடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர்கள் அருண், ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். சுமார் 400 பள்ளிகளின் சார்பில் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் தரப்பில் கண்டிப்பான உத்தரவுகள், பிறப்பிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–
ஜி.பி.எஸ். கருவிகள்
* பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியே வாசலிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கேமராக்கள், தெளிவாக படம் பிடிப்பனவாக இருக்க வேண்டும்.
* மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்கள் மற்றும் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை புகைப்படத்துடன் சேகரித்து வைத்திருக்கவேண்டும். தனியாக வேன்களில் மாணவ–மாணவிகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், மேற்படி வேன்களின் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
* பள்ளி வேன்–பஸ்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருக்க வேண்டும்.
* மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு, அந்தந்த பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. பெற்றோரும், தங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பி வரும் வரை, உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மேற்கண்டவாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
வேகத்தடுப்புகள்
பள்ளிகள் செயல்படும் சாலைகளில், உரிய வேகத்தடைகளை அமைப்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் மீண்டும், இதுபோன்ற ஆலோசனை கூட்டத்தை நடத்திடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை