Ad Code

Responsive Advertisement

கணிதப் போட்டித் தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவர்களிடம் கணிதப் பாடம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திருநின்றவூரை அடுத்த பாக்கம் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கணிதப் போட்டித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

இதில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றுச் சிறந்து விளங்க இது போன்ற போட்டித் தேர்வுகள் பயனுள்ளதாக அமையும் என்று தேர்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போட்டித் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 22-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என சேவாலயா அமைப்பினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement