கல்வித் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் அண்மையில் அனுப்பியுள்ளது. விதிப்படி, கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதோடு முழுமையான ஆய்வகம், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், சில கல்லூரிகளில் இதுபோன்ற பல்கலைக்கழக ஆய்வின்போது மட்டும் வாடகைப் பேராசிரியர்களைப் பணியமர்த்தி கணக்குக் காட்டிவிட்டு, ஆய்வு முடிந்த பின்னர் அவர்களை அனுப்பிவிடுவது தொடர்கதையாகி வந்தது.
இதைத் தடுக்கும் வகையில், இணைப்புக் கல்லூரிகள், தங்களிடம் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களின் விவரங்களை அவர்களின் புகைப்படத்துடன் கல்லூரி இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்ற புதிய நடைமுறையை பல்கலைக்கழகம் கொண்டுவந்தது.
ஆனால், இந்த நடைமுறையை பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றவில்லை. இந்த நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும் முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியது:
பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருப்பதை உறுதி செய்யவும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், எந்தெந்த கல்லூரிகளுக்கு எப்போது ஆய்வுக் குழு வரும் என்பது தெரிவிக்கப்படாது.
கல்லூரிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக தேர்வு செய்யப்பட்டு திடீர் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின்போது 1:15 என்ற விகிதத்தில் பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனரா, அவர்களின் கல்வித் தகுதி, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். இதில் குறைபாடு உள்ள கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை