தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் உறுதி செய்துகொள்வது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இதுபோல, தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தற்போதைய அங்கீகார நிலையை http://www.ugc.ac.in/deb/ என்ற இணையதளத்தில் பார்த்து உறுதி செய்த கொண்ட பிறகே, சேரவேண்டும்.
அவ்வாறின்றி, யுஜிசி அனுமதி பெறாத கல்வி நிறுவனத்தில் தொலைநிலைப் படிப்பை மேற்கொண்டு பெறப்படும் பட்டம் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியற்றதாகக் கருதப்படும்.
அதோடு, கல்வி நிறுவனத்தின் கல்வி வழங்கக் கூடிய எல்லையையும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அதாவது, மாநில அனுமதியை மட்டும் பெற்று நடத்தும் கல்வி நிறுவனங்கள் அந்த மாநிலத்துக்குள் மட்டுமே கல்வி மையங்களை அமைத்து தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும். அந்த மாநிலத்தைத் தாண்டி, பிற மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ கல்வி மையங்களைத் தொடங்க இயலாது. யுஜிசி-யின் சிறப்பு அனுமதியைப் பெற்ற பிறகே இதுபோல எல்லையைத் தாண்டி படிப்புகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை