சென்னை மாநகராட்சி கல்வித்துறை மற்றும் க்வெட் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின வினாடி வினா போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
சென்னை அரும்பாக்கம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கே.சின்னையா, எஸ்.ஜீவானந்தம், ஜி.லலிதா ஆகியோர் கொண்ட அணி முதலிடத்தையும், ஏரிக்கரை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எல்.ஜானகி, ஆர்.ரோஜா, எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அணி 2-ம் இடத்தையும், வடபழனி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எ.ரமணா, எஸ்.மோகன்ராஜ், எஸ்.சங்கீதா ஆகியோர் கொண்ட அணி 3-ம் இடத்தையும் பிடித்தன.
முதல் 3 இடங்களைப் பிடித்த இந்த அணிகள் முறையே சிங்கப்பூர், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஊர்களில் உள்ள அறிவியல் மையங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட், பரிசுகளையும், மற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் மேயர் சைதை துரைசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், கல்வி நிலைக் குழுத் தலைவர் த.மகிழன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை