கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஒரு புகார் மனு அளித்தார். அதில் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களை கோவை புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும், ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்த புத்தகங்களில் சுமார் 350 டன் புத்தகங்கள் மாயமானது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்துவுக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மரியமுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் புத்தகங்கள் மாயமான வழக்கில் முன்னாள் கல்வி அதிகாரி ராஜேந்திரன், இணை ஆய்வாளர் பிரின்ஸ் சாலமன், புலியகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து சேது, இணை பள்ளி ஆய்வாளர் அருள் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக உதவியாளர் சரவணக்குமார், சிறப்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். தகவலறிந்ததும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் சரவணக்குமார் கைது செய்யப்பட்டார்.
அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அவர் போலீசாரிடம் கூறும்போது ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும், புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் வைத்திருந்த மாயமான புத்தகங்களை கோவை சிங்காநல்லூரில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடையில் ரூ.4½ லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தோம் என்றார்.
இந்த புத்தகங்களை எப்படி பள்ளியில் இருந்து எடுத்து சென்றனர்? புத்தகங்களை வாங்கிய பழைய பேப்பர் வியாபாரி யார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
இத்துடன் தலைமறைவான அதிகாரிகளை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கைதானால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை