இந்தியாவில் 28 கோடிக்கும் அதிகமானோர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கூறினார். கல்வி- சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியது:
இந்தியா பல நிலைகளில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், கல்வியில் பின் தங்கியிருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 74 சதவீதம் பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். சுமார் 28.7 கோடி பேர் படிப்பறிவு இல்லாமல் உள்ளனர். இதில், பெண்கள் அதிகம். மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்குப் பங்காற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் முன்வரவேண்டும். இந்த விஷயத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது என்றார். நிகழ்ச்சியில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மிலித்ந் காரத், போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் பி.சிவக்குமார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.நரசிம்மன், வளரும் அறிவியல் இதழின் ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை