மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 இரண்டாம் இடைத்தேர்வு வினாத்தாளில் குறிப்பிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இயற்பியலில் ஐந்தாவது (திடவாயு பொருட்களில் இயந்திரவியல்) மற்றும் ஆறாவது (அலைவுகள்) பாடங்களில் மட்டும்தான் வினாக்கள் கேட்க வேண்டும். ஆனால், ஏழாவது பாடமான 'அலை இயக்கம்' பாடத்தில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன. இப்பாடம் இன்னும் ஆசிரியர்களால் நடத்தப்படவில்லை.
நேற்று நடந்த கணக்குப்பதிவியியலிலும் ஏழாவது பாடம் ரொக்க ஏடு, எட்டாவது பாடம் சில்லரை ரொக்க ஏடு மற்றும் ஒன்பதாம் பாடம் வங்கி சரிக்கட்டும் பட்டியல் ஆகிய பாடங்களை தவிர முதல் ஒன்று முதல் ஆறாம் பாடங்களில் இருந்தும் தேவையின்றி வினாக்கள் இடம் பெற்றன. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், "இடைத்தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டும் வினாக்கள் கேட்கப்பட்டு மாணவர்களின் திறனை சோதிக்க வேண்டும். ஆனால் வினாத்தாள் குழு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தி சொதப்பியுள்ளது," என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை