Ad Code

Responsive Advertisement

TNPSC - குரூப் 4 எழுத தகுதிகள் என்ன? கேள்விதாள் எப்படி அமையும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

குரூப் 4  தேர்வு எழுத  தகுதிகள்

1)குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு இனையான படிப்பு
+2 இளங்கலை முதுகலை போன்ற பட்ட படிப்புகளை படித்தவர்களும்
விண்ணப்பிக்கலாம்

2)தட்டச்சர் வேலைக்கு மட்டும் 10 ம் வகுப்பு தகுதியுடன்  தட்ச்சு தமிழ்    ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் இளநிலை ஒன்றில் முதுநிலை
இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை.

வயது தகுதி
குறைந்தபட்ச வயது தகுதி  18 வயது அதிகபட்டச வயது இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் கல்வித் தகுதி பொறுத்து மாறுபடும்.

OC -30வயது               BC/BCM/MBC/DNC-32 வயது              SC/SCA/ST.-35 வயது ஆதரவற்ற விதவை-35 வயது (அனை்தது பிரிவு)

குறிப்பு  +2 மற்றும்  அதற்கு மேல் படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர் (BC/MBC/SC/ST)அனைவருக்கும் அதிகப்ட்ச வயது வரம்பு இல்லை.

கேள்வித்தாள் எப்படி அமையும்

தமிழில் 100 கேள்விகள் பொதுஅறிவு 75 கேள்விகள் மற்றும் 25 கேள்விகள் கணிதம் மற்றும் நுன்னறிவு சார்ந்த கேள்விகள் அமையும்
  
கேள்விகள் 200 இருக்கும் ஒரு கேள்விக்கு 1.5 மதிபெண்கள் மொத்தம் 300 மதிப்பெண்கள்

எப்பொழுது விண்ணப்பிக்கலாம் 
அறிவிப்பு விரைவில் வரவுள்ளது அனைவருக்கும் விண்ணப்பிக்க ஆலோசனை இங்கு கூறப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement