தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கு, ஆசிரியைகள் கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கம்மவார் பள்ளியில் பெண்குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பரமசிவன் தலைமை வகித்தார். பயிலும் குழு ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை விக்னேஷ்வரி வரவேற்றார். சப்- கலெக்டர் கார்த்திகேயன் மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி. நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின், ஆசிரியைகள் மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவரும் 'பெண்குழந்தைகளை காப்போம்,' என உறுதி மொழிஎடுத்துகொண்டனர். பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை