ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணிக்காலியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.
பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் விவரம் வருமாறு:
அனைத்து முன்னுரிமை பிரிவினர்கள்(மாற்றுத்திறனாளிகள் உள்பட) நாளது தேதி வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 31.12.2008 வரையும், ஆதிதிராவிடர், அருந்ததியினருக்கு 31.12.2010 வரையும், பழங்குடியினருக்கு நாளது தேதி வரையில் பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பதிவு மூப்புடைய அனைத்து பதிவுதாரர்களும் பெயர் பரிந்துரை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு சூலக்கரை தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 29-ஆம் தேதி நேரில் வரவேண்டும்.
அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி தகுதிக்கான சான்றுகள், குடும்ப அட்டை ஆகியவைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். எனவே குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகிறவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை