சரியாகப் படிக்கவில்லையென்றாலும் முடியும் என நினைத்தால் சாதிக்கலாம் என்று சந்திராயன், மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
5 முறை முயன்று அமெரிக்காவும், 15 முறை முயன்று ரஷியாவும் சாதித்த விஷயத்தை நாம் முதல் முறையிலேயே சாதித்துள்ளோம். ஜப்பான், சீனா ஒரு முறை கூட சாதிக்காததை நாம் சாதித்துள்ளோம்.
பெரிதாக படிக்கவில்லையென்றாலும் சாதிக்க முடியும். நாசா விஞ்ஞானிகள் போன்று பெரிய கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கும், எங்களது விஞ்ஞானிகளுக்கும் கிடைக்கவில்லை.
ஆனால், அவர்களால் முடியாததை 18 மாதங்களில் முடித்துக் காட்டியுள்ளோம். அவர்கள் செலவு செய்ததில் 10-இல் ஒரு பங்கைதான் செலவளித்துள்ளோம். அதற்கு உழைப்பே காரணம்.
விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா சரிநிகராக நடத்தப்படுவதற்குக் காரணம், நம்மால் முடியும் என்று நினைத்ததுதான்.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு இடத்தில் சாதிக்க வேண்டும் என்று விதை விழும். அதுதான் வளர்ந்து பெரிதாகும் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், வசந்த் அன் கோ தலைவர் எச்.வசந்தகுமார், தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், வி.ஜி.பி. குழுமத்தின் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை