அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் நியமனத்தை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக எந்தவொரு விளம்பரமும் வெளியிடப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே அரசுப் பணியிடங்களை நிரப்பக் கூடாது.
பொது அறிவிப்பு வெளியிட்டு, போட்டித் தேர்வு நடத்தி அதன் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு புதன்கிழமை (அக்.29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படலாம்.
ஆனால், அதில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீல் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை