தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) மூடப்படும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக பணியாற்றிய கடந்த 3 ஆண்டுகளில் கல்வித் துறை வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்தார்.
மாணவ-மாணவிகளுக்கான நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தார்.
மேலும், அனைவரும் கல்வி பெறக்கூடிய வகையில் 2023 தொலைநோக்குத் திட்டத்தையும் அவர் நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் தனியார் பள்ளிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 4,500 தனியார் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை