உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
*காப்பித்தூளில் புளியங்கொட்டைத்தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள். அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும். ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில் உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால் சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை