Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு!!!

வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதிக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற சனிக்கிழமை முதல் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சிக் காலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மாணவ மாணவிகள் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி, கணியம்பாடி, வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், மாதனூர், அணைக்கட்டு, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர், நட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, மற்றும் கந்திலி ஆகிய 20 பஞ்சாயத்து அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்ட நூலகங்களை அணுகி போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement