செப்., 25 முதல் அக்.,10 வரை நடைபெற்ற +2 துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு முடிவுற்ற 15 தினங்களுக்குள் தேர்வர்களுக்கு வழங்கிட வேண்டுமென முடிவு மேற்கொள்ளப்பட்டு அதன்படி, அக்.,10 (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் (Government Examinations Service Centre) 29.10.2014 முதல் 31.10.2014 வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/-ஐ பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாளின் நகல் (Copy of the answer sheet) பெறுவதற்கான கட்டணம்
பகுதி – I மொழி - ரூ.550/-
பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.550/-
ஏனையப் பாடங்கள் - ரூ.275/-
மறுகூட்டல் (Re-totalling) கட்டணம்
மறுகூட்டல் கட்டணம்
பகுதி – I மொழி, பகுதி – II (ஆங்கிலம்) - ரூ.305/-
மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்)
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) -ரூ.205/-
விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாட்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறியதுகொள்ளவும் இயலும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை