ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட குடிமைப் பணி முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசியாகும். இதற்கான அறிவிப்பை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் சென்னை குமாரசாமி ராஜா சாலையில் அமைந்துள்ள குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 225 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர, இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களும், எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இந்தப் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். பயிற்சிக் காலத்தில் கட்டணம் இல்லாத விடுதி வசதி உண்டு.
மேலும், தமிழக அரசால் அனைத்து மாணவர்களுக்கும் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மைய தொலைபேசி எண்கள்: 044-24261475, 24621909.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை