பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு, புதிய மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள், வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தமிழக தேர்வுத் துறை அறிவுறுத்திஉள்ளது.
அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்புக்கு, அரசு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணி துவங்கி உள்ளது. இந்தத் தேர்வை நடத்த, கல்வி மாவட்டம் வாரியாக, புதிதாக தேர்வு மையங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.புதிய மையங்கள் அமைப்பதற்கான பரிந்துரையை, மாவட்ட கல்வி அலுவலர்கள், வரும் 30ம் தேதிக்குள், சென்னையில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப, புதிய தேர்வு மையங்கள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்காக, 150 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதற்கு வசதியாக, காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதியுடைய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட உள்ளன என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை