செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம். இதன் மூலம் , முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடு இந்தியா என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அனுப்பி உள்ள மங்கயான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கி உள்ளது. செவ்வாயில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், 2 நாட்களுக்கு முன் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக முதல்வரும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்டனர்.
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம். இதன் மூலம் , முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடு இந்தியா என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை