தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலைதாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாணை எண்: 720-ஐ எந்த காரணம் கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது. 100 சதவிகித மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தை உருவாக்கி அதில், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள எம்.பில்- தகுதிக்கான ஊக்கத்தொகையை அளிக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், அதற்கேற்ப மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு மாநில மகளிரணிச் செயலர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழுத் தீர்மானங்கள் குறித்து மாநிலப் பொதுச் செயலர் சாமி. சத்தியமூர்த்தி பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை