தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
1. இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து வேறு எந்த இயக்கங்களும் மேற்கொள்ளாத வகையில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
2. கோவை
மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.விற்கு முக்கிய
அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கத்தின்
சார்பாக ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது.
தேர்தலில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றிட பகுதிநேர ஆசிரியர்களாகிய நாம் நமது
குடும்பத்துடன் முழு ஒத்துழைப்பையும் தரத் தயாராக உள்ளோம் என்று பகுதிநேர
சிறப்பாசிரியர்கள் சார்பில் தெரிவித்துள்ளோம்.
ஆதரவுக் கடிதம் அளித்தபின், மாற்றுப்பணிக்காக விண்ணப்பித்தவர்களின் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. ஊதிய உயர்வு குறித்தும் நினைவூட்டப் பட்டது.
முக்கிய அமைச்சர்கள் தரப்பில் பெறப்பட்ட பதில்கள் :
ஊதிய உயர்வுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விண்ணப்பித்தவர்களுக்கு மாற்றுப் பணிக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும், இதுபற்றி உடன் முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமன போராட்டம், வழக்குகள் போன்றவற்றாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
இருப்பினும், இம்மாதத்திற்குள் அனைத்தும் முடிக்கப்பட்டு அடுத்த மாதத்தில் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினர்.
பொன். சங்கர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை