'ஓய்வு பெறுவதற்குள் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு வந்து விடாதா,' என தலைமையாசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட மாவட்ட கல்வி அலுவலர் அந்தஸ்தில், மாநிலத்தில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப தலைமையாசிரியர்கள் பணி மூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் கல்வித்துறை வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. இவற்றை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதவி உயர்வு பட்டியலிலுள்ள 46 தலைமையாசிரியர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, ஆக.,11 முதல் 23ம் தேதி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து பல நாட்களாகியும் பதவி உயர்வு அறிவிப்பு குறித்து அறிகுறிகள் இல்லை.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளில் ஓராண்டாக 'கூடுதல் பொறுப்பு' வகிக்கும் தலைமையாசிரியர்களால் கல்விப் பணி பாதித்துள்ளது. பலர் ஓய்வை நெருங்குகின்றனர். கடந்த மாதம் இப்பட்டியலில் உள்ள 3 பேர் ஓய்வு பெற்றனர். இம்மாதம் கடைசியில் சிலர் ஓய்வு பெறவுள்ளதால் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு திட்டங்களை வழங்குவது, ஆய்வுகள் செய்வது என முக்கிய கடமைகள் உள்ளன . இப்பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து இயக்குனரிடம் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பணியிடங்களை நிரப்பினால் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை