தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.நகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ் பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில், அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.
ஆசிரியர்கள் தற்போது கருவூலம் மூலம் சம்பளம் பெறவும், ஜி.பி.எப்., கணக்கு எண் முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது. 'அந்த கணக்கு எண் இல்லை என்றால் சம்பளம் வழங்க முடியாது' என கருவூலங்களும் கைவிரித்துவிட்டன. இதனால், இனி வரும் மாதங்களில் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், 'அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நடைமுறைகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் நீடிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஜி.பி.எப்., வங்கி கணக்குகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை