Ad Code

Responsive Advertisement

மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம் : 'ஆயிரத்தில் ஒருவன்' குறித்து ஜெ., பெருமிதம்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், எனக்கு மறக்க முடியாத, வாழ்நாள் அனுபவத்தை பெற்று தந்தது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: திரை வானிலும், அரசியல் வானிலும், எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு, எம்.ஜி.ஆர்., வரலாற்று சாதனை படைத்தவர். அவருடன் இணைந்து, நான் நடித்த, முதல் தமிழ் வெற்றி திரைப்படம், 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படம், நவீன தொழில் நுட்பத்துடன், மீண்டும் தமிழக தியேட்டர்களில், வெற்றி நடைபோட்டு, வெள்ளி விழாவை கொண்டாட இருப்பது, எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படம், 1965ல், 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தற்போது, ஒரு வாரம் ஓடினாலே, அதை வெற்றிப்படம் என சொல்லும் காலத்தில், மறு வெளியீட்டிலும், 'ஆயிரத்தில் ஒருவன்' 175 நாட்கள் ஓடுகிறது. அந்தப் படத்தின் கதை, தரம், அந்த படத்தில் பங்கு பெற்றோரின் திறமை எப்படி இருந்திருக்கும் என்பதை, எண்ணி பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு, இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணிப் பாடகி சுசீலா, வசனகர்த்தா சண்முகம், நடிகை விஜயலட்சுமி, மாதவி, ஆகியோர் கவுரவிக்கப்படுவது மகிழ்ச்சி.
இப்படத்தை தயாரித்து, இயக்கிய பந்தலு, என் தந்தையை போன்றவர். அவரது மகள் விஜயலட்சமி, மகன் ரவிசங்கர், ஆகியோர், அப்படத்தை மறு வெளியீடு செய்ததற்கு, என்
பாராட்டுகள்.'ஆயிரத்தில் ஒருவன்' படம் எனக்கு, மறக்க முடியாத வாழ்நாள்
அனுபவத்தை பெற்று தந்தது.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement