ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், எனக்கு மறக்க முடியாத, வாழ்நாள் அனுபவத்தை பெற்று தந்தது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திரை வானிலும், அரசியல் வானிலும், எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு, எம்.ஜி.ஆர்., வரலாற்று சாதனை படைத்தவர். அவருடன் இணைந்து, நான் நடித்த, முதல் தமிழ் வெற்றி திரைப்படம், 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படம், நவீன தொழில் நுட்பத்துடன், மீண்டும் தமிழக தியேட்டர்களில், வெற்றி நடைபோட்டு, வெள்ளி விழாவை கொண்டாட இருப்பது, எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படம், 1965ல், 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தற்போது, ஒரு வாரம் ஓடினாலே, அதை வெற்றிப்படம் என சொல்லும் காலத்தில், மறு வெளியீட்டிலும், 'ஆயிரத்தில் ஒருவன்' 175 நாட்கள் ஓடுகிறது. அந்தப் படத்தின் கதை, தரம், அந்த படத்தில் பங்கு பெற்றோரின் திறமை எப்படி இருந்திருக்கும் என்பதை, எண்ணி பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு, இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணிப் பாடகி சுசீலா, வசனகர்த்தா சண்முகம், நடிகை விஜயலட்சுமி, மாதவி, ஆகியோர் கவுரவிக்கப்படுவது மகிழ்ச்சி.
இப்படத்தை தயாரித்து, இயக்கிய பந்தலு, என் தந்தையை போன்றவர். அவரது மகள் விஜயலட்சமி, மகன் ரவிசங்கர், ஆகியோர், அப்படத்தை மறு வெளியீடு செய்ததற்கு, என்
பாராட்டுகள்.'ஆயிரத்தில் ஒருவன்' படம் எனக்கு, மறக்க முடியாத வாழ்நாள்
அனுபவத்தை பெற்று தந்தது.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை