கணித ஆசிரியர் சீனிவாசன் எழுதி, சேகரித்த, 5,600 கணித ஆய்வு புத்தகங்களை, அவரது குடும்பத்தார், கணித ஆராய்ச்சி மையத்திற்கு தானமாக வழங்கினர்.
நங்கநல்லுாரைச் சேர்ந்தவர், கணித ஆசிரியர் பி.கே.சீனிவாசன். 2005ம் ஆண்டு மறைந்த அவர், கணிதம் குறித்து ஏழை மாணவர்களுக்கு கற்பித்தார். கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டவர். அவர் எழுதிய, சேகரித்த, 5,600 கணித ஆய்வு புத்தகங்களை, பி.கே.சீனிவாசன் கணித கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம், அவரது குடும்பத்தார் பராமரித்தனர்.
அந்த, 5,600 புத்தகங்களை, இந்திய கணித ஆசிரியர் கழகத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி, நங்கநல்லுாரில், பி.கே.சீனிவாசன் வாழ்ந்த வீட்டில் நடைபெற்றது. சீனிவாசன் குடும்பத்தார் புத்தகங்களை வழங்க, இந்திய கணித ஆசிரியர் கழக செயலர் மகாதேவன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், பர்வீன் சுல்தானா, ரங்காச்சாரி, ரங்கன், கண்ணன் மற்றும் சீனிவாசனிடம் கல்வி கற்றோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை