நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது நியமன ஆணைகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
அந்த உத்தரவுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் பணியில் சேர சென்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 2 பணியிடம் காலியாக உள்ள பள்ளிக்கு, 3 ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது. இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர் அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை