'நாளை நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு, இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க தேவையில்லை' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் புதிய அறிவிப்பு வருமாறு:
24.8.14ல், முதல் மற்றும் இரண்டாம் தாள் என, சிவில் தேர்வு, முதல்நிலை தேர்வு நடக்கும்.
இரண்டாம் தாள் தேர்வு கேள்வித்தாளில், 10ம் வகுப்பு தரத்தில் இடம் பெற்றுள்ள ஆங்கில திறனறிதல் கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க வேண்டாம்.
இந்த கேள்விகள், 'கிரேடு' மற்றும் 'மெரிட்' பட்டியலுக்காக, மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
எனவே, தேர்வர்கள், ஆங்கில கேள்விகளை தொட தேவையில்லை. மேலும், ஆங்கில கேள்விகள், இந்தி வழி கேள்வித்தாளில் அச்சடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மொத்த மதிப்பெண்ணில், ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண், கழிக்கப்படும். எனவே, பிரதான தேர்வுக்கு (மெயின்) தகுதியான தேர்வர்களை தேர்வு செய்யும்போது, முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் போக, மீதியுள்ள மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை