தொழில்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 500 பேருக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மாதம் ரூ.4,000 கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளது. பிஇ, பிடெக், எம்பிபிஎஸ், எம்பிஏ, எம்எஸ்சி (ஜியாலஜி), எம்எஸ்சி (ஜியோ-பிசிக்ஸ்) படிப்புகள் படிக்கும் சிறந்த தாழ்த் தப்பட்ட, பழங்குடியின வகுப் பைச் சேர்ந்த மாணவர்கள் 500 பேருக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகையை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) வழங்குகிறது.
பொறியியல் படிப்பில் 247 பேரும், மருத்துவப் படிப்பில் 45 பேரும், எம்பிஏ படிப்பில் 73 பேரும், எம்எஸ்சி படிப்புகளில் 135 பேரும் தேர்வுசெய்யப் படுவார்கள். பயனாளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீத இடங் கள் மாணவிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவ-மாணவிகள் மெரிட் அடிப்படையில் தேர்வுசெய்யப் படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்களை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ongcindia.com) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை யும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை