மாணவர்களின் கல்வி அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அனுப்பிய சுற்றரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவ, மாணவிகள் வீதம் தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வறை ஒன்றுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும். குறிப்பாக எந்தப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்படுகிறதோ, அப்பாடம் தொடர்பான ஆசிரியர்களை அறைக் கண்காணிப்பாளர் பணியில் எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.
அரசு பொதுத் தேர்வு போல் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை அறிந்து கொள்ளும் வகையில் இத்தேர்வை நடத்த வேண்டும். மேலும், ஆசிரியர்கள் பாடத் தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை பொதுத்தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும். அதோடு, மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவ, மாணவிகளிடம் அளித்து சரிபார்க்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை