Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 5ம் தேதி வரை இணைய தளம் மூலம் நடக்கிறது. அரசு, நகராட்சி உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் காலியான பட்டதாரி, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 


ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள இருப்பிட முகவரியில் மாவட்டத் தில் உள்ள இடங்களில் கவுன்சலிங் நடக்கும். கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தெரிவு கடிதம் ஆகியவற்றுடன் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும். கவுன்சலிங் 32 மாவட்டங்களில் நடக்கிறது.சென்னையில் மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீலட்சுமி மேனிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரத்தில் டாக்டர் பி.எஸ் சீனிவாசன் நகராட்சி மேனிலைப்பள்ளியிலும் கவுன்சலிங் நடக்கிறது. இன்று தொடங்கும் கவுன்சலிங்கில் அந்தந்த மாவட்டத்துக்குள் காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement