திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த ராஜா மனைவி தாரணி (32). இவர் துவாக்குடி அடுத்த தேவராயனேரி நரிக்குறவர் காலனியில் உள்ள திருவள்ளுவர் குருகுல மானிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளியை அதே பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவன உரிமையாளர் மகேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
ஆசிரியர்கள் நியமனத்தில் லட்சக்கணக்கில் பணம் பெறப்படுவதாகவும், பள்ளிக்கு வரும் மதிய உணவுப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இம்மனுவை தாரணிதான் அனுப்பியதாக சந்தேகித்த மகேந்திரன் தனது உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த தாரணியை சரமாரியாகத் தாக்கி செல்போன், ரொக்கம் ஆகியவற்றை பறித்தார். மேலும், அவரை தனியறையில் வைத்து பூட்டி சித்ரவதை செய்துள்ளார். தகவலறிந்த தொடக்கக் கல்வி அலுவலர் ஆரோக்கிய மேரி பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார், மகேந்திரன் அவரது மனைவி சீதா, உறவினர்கள் உதயா, அருண், அருள்மேரி, கவிதா உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவில் வழக்குப் பதிந்து தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை