Ad Code

Responsive Advertisement

செப்., 6,7ல் திருச்சியில் மாநில அறிவியல் கண்காட்சி

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது ( 2013--14) க்கான மாநில அறிவியல் கண்காட்சி, திருச்சியில் நடைபெறுகிறது.தமிழகத்தில், 32 மாவட்டங்களில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், மாவட்ட அளவில் தேர்வான பள்ளிகளுக்கு, மாநில அளவிலான போட்டி திருச்சியில் நடைபெற உள்ளது.
திருச்சி அருகே குட்டப்பட்டி ஷிவானி இன்ஜி., கல்லுாரியில், செப்.,6 மற்றும் 7ல் மாநில அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் பழனியப்பன், வீரமணி, கல்வித்துறை செயலர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, பஸ் போக்குவரத்து செப்.,5ம் தேதி பகல் 1 மணி முதல் திருச்சி, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து இயக்கப்படும், என, அறிவியல் தொழில் நுட்ப மைய நிர்வாக இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement