கணிதப் பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகக் கற்பித்தல், கணித உபகரணங்களைப் பயன்படுத்துதல், நவீன முறையில் எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களுக்குக் கணிதத்தை விளக்குதல் போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தருமபுரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய இடங்களில் கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி இப்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டல வாரியாக பயிற்சி பெற்ற இந்த கருத்தாளர்கள், மாவட்டங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சியை வழங்குவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை