Ad Code

Responsive Advertisement

அரசு கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணி : ஆக.,20 முதல் விண்ணப்பம்

அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல், சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்ப வினியோகம், சி.இ. ஓ., அலுவலங்களில் வினியோகிக்கப்படுகிறது. 


தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல், சட்டக்கல்லூரிகளில் காலியாக இருக்கும் 200க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், விரிவுரையாளர்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நியமிக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆக.,20 முதல் செப்.,15 வரை, ரூ.100 கொடுத்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.முதன்மைக் கல்வித்துறையினர் கூறுகையில், "அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கானதேர்வுக்குரிய விண்ணப்பங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அடுத்த வாரம் வரலாம், என எதிர்பார்க்கிறோம். கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி.,இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்,” என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement