ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், PF பிடித்தம் செய்ய மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்தும் திட்டம், கடந்த பல மாதங்களாக ஆய்வில் இருந்து வந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச பென்ஷன் தொகை மாதம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 28 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று PF பிடித்தம் செய்யப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் கூடுதல் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை