கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனியாகவும் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், உதவி தொடக்ககல்வி அலுவலர்களுக்கு தனியாகவும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் சபீதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் வரும் 4ம் தேதி அனைத்து சிஇஓக்களின் நேர்முக உதவியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை 8 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் கூட்டங்களில் அருகே உள்ள மாவட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இது தவிர நடப்பு கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு ஆங்கிலப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட விவரம், கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட விபரம் உள்ளிட்ட 18 முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 13ம் தேதி திருவள்ளூரில் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி விழுப்புரத்திலும், 18ம் தேதி தஞ்சாவூரிலும், 19ம் தேதி புதுக்கோட்டையிலும், 20ம் தேதி திண்டுக்கல்லிலும், 21ம் தேதி கரூரிலும், 22ம் தேதி கோவையிலும் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. கடைசி கட்டமாக நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் வரும் செப்.1ம் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை