சென்னை உயர்நீதிமன்றத்தின் 27-ஆவது புதிய தலைமை நீதிபதியாக புது தில்லியைச் சேர்ந்த சஞ்சய் கிஷன் கெளல் (எஸ்.கே.கெளல்) சனிக்கிழமை பதவியேற்றார்.
அவருக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட கெüலுக்கு முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தப் பதவியேற்பு விழா சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பா.வளர்மதி, கோகுல இந்திரா, ரஹீம், டி.கே.எம்.சின்னையா ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் தவிர, தலைமை நீதிபதியின் மனைவி ஷிவானி, அவரது இரண்டு மகள்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புது தில்லியைச் சேர்ந்தவர்
உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.கே.கெüல் (55), 1958-ஆம் ஆண்டு பிறந்தார். தனது பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் புது தில்லியில் நிறைவு செய்த அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார்.
அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி வழக்குரைஞராக பதிவு செய்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தில்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.
தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் 27-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட எஸ்.கே.கெüல், பதவியேற்பு விழா முடிந்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார்.
அங்கு சென்று தலைமை நீதிபதியின் இருக்கையில் சற்று நேரம் அமர்ந்தார்.
பின், உயர்நீதிமன்றத்தில் உள்ள அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார். தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்துக்கு வந்ததும் போலீஸார் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை