பள்ளிகளில், சமஸ்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'அதற்கு பதில், அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பாரம்பரியம் அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்' என, ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர், ஆகஸ்ட், 7ம் தேதி முதல், 13ம் தேதி வரை, சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளதை அறிந்தேன்.அந்த கடிதத்தில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், கேந்திரிய வித்யாலயா, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதுடன், மாநில அரசுகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை, மாநில, மாவட்ட அளவில் நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை