பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி., சார்பில், இலவச, 'காமிக்' புத்தகம், வரும், 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள் மத்தியில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில், வெளிநாடுகளைப் போல், போக்குவரத்து கட்டுப்பாடுகளை, இந்தியாவில் அமல்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நாடு முழுவதற்குமான சாலை விதிகளை வகுத்தளித்துள்ள, ஐ.ஆர்.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக, சாலை பாதுகாப்பு விதிகள், விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை தயாரித்துள்ளது. ஒன்பது முதல், 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம், 25ம் தேதி, சி.ஐ.டி., நகர், சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. ஐ.ஆர்.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குழந்தைகள் மனதில், எளிதாக பதியும் வகையில், 'மிக்கி மவுஸ், டொனால்ட் டக்' போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம், 'காமிக்ஸ்' வடிவில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை