ஜூலை 1 -சில நிமிடத் தாமதத்துக்காக மாணவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பும் தனியார் பள்ளிகளின் நடவடிக்கை தவறானது என்று அமைச்சர் ந.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வீட்டை விட்டு பள்ளிக்குத்தான் மாணவர்கள் புறப்பட்டு வருகின்றனர். வேண்டுமென்றே எவரும் தாமதமாகச் வருவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில நிமிடத் தாமதத்துக்காக மாணவர்களை பள்ளிக்குள் விடாமல் வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைப்பது, பெற்றோர்களை அவமரியாதையாகப் பேசுவது போன்ற செயல்களில் பள்ளி நிர்வாகிகள் ஈடுபடுவது மாணவர்களை மன ரீதியாக பாதிக்கும்;
இதுபோன்ற நெருக்குதல் காரணமாக பள்ளிக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, தாங்கள் செல்லும் வாகனங்களை அதிவேகத்தில் செலுத்தி, விபத்தில் சிக்குகின்றனர்; இதில் உயிர்ப்பலி ஏற்பட்டால் அதற்கு பொறுப்பேற்பது யார்? என்பதையும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். இப்பிரச்சனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை